கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல்கள் அமைத்திட வேண்டும்மென திமுக மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன்MLA அறிக்கை!திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதியார் அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் தமிழக மக்களை கோடை வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோடை காலம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சாலை மற்றும் தெரு ஓரங்களிலும், பொதுமக்கள் சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி அவர்களுடைய தாகத்தை தனித்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பு: தாங்கள் அமைக்கும் தண்ணீர் பந்தல்களின் விவரங்களை மாவட்ட கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைத்திட வேண்டும்மென திமுக மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன்MLA அறிக்கை.
Add Comment