ரூ.48 லட்சத்தில் சுற்றுச்சுவர், உணவு கூடம்எம்.எல்.ஏ., மேயர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர் ஓசூர் மாநகராட்சி அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசு மற்றும் டி.வி.எஸ்., நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் உணவு கூடம் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ், மாநகர செயலாளரும் மேயருமான சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா IAS ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, சென்னீர்ப்பா தலைவர் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு பெற்றோர் ஆசிரியர் கழகம்( PTA PRESIDENT ) கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, மாதேஸ்வரன், தேவி மாதேஸ், இந்திராணி, மாவட்ட பிரதிநிதி நாகராஜ், வெங்கடசாமி, டி.வி.எஸ்., குழும தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளர் கமலகண்ணன்,தலைமை ஆசிரியர் ராணி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்,மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூரில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் உணவு கூடம் கட்ட பூமி பூஜைY.பிரகாஷ் – S.A.சத்யா துவக்கி வைத்தனர்.
Add Comment