Home » கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

by Babukanth V
0 comment

அறிஞர் அண்ணா கல்லூரியின் ஆங்கிலத்துறையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்.

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை ( 28 .03 2023) அன்று நடைபெற்றது. கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் S.பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவியர்கள் பல்வேறு படைப்பாளுமை திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் தகவல் தொடர்பு மொழியாக ஆங்கிலம் பயன்படுவதால் அதனை சரளமாக அனைத்து மாணவ மாணவியர்களும் பேசுதல் வேண்டும். நாள்தோறும் ஆங்கில நாளிதழ்களை வாசித்தல் வேண்டும் என்று பேசினார். கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் ஜென் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவி , இணை பேராசிரியை முனைவர் R. பாத்திமா ராய் கலந்து Recent Trends in English language Teaching and learning என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில், மாணவ மாணவியர்கள் நாள்தோறும் ஆங்கில க் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடத்தில் உள்ள கருத்துக்களை வாழ்க்கையில் எடுத்து முன்னேற்றம் காண வேண்டும். பல்வேறு கருத்தரங்களில் பங்கு பெற வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். கருத்தரங்கத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆங்கிலத் துறை ஆராய்ச்சி மாணவ மாணவிகள் பங்குபெற்று சிறப்பித்தனர். கருத்தரங்கத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியர்களான திரு மாட்டின் பால்ராஜ் , திரு புஷ்பராஜ் , திரு மணி, முனைவர் லெமன்சினோ, திருமதி கலைவாணி திருமதி இந்திரா, திருமதி சுமதி, திருமதி பிரியா ,திருமதி சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கின் நிறைவாக கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் சரவணகுமார் நன்றி கூற, கருத்தரங்கம் நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.

You may also like

Add Comment
error: Content is protected !!