Home » ஊத்தங்கரையில் ஸ்ரீ சத்திய சாய் அன்னபூர்ணா டிரஸ்ட் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது

ஊத்தங்கரையில் ஸ்ரீ சத்திய சாய் அன்னபூர்ணா டிரஸ்ட் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஸ்ரீ சத்திய சாய் அன்னபூர்ணா டிரஸ்ட் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான கரோனா நல உதவிகள் வழங்கும் திட்டத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஊத்தாங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை பள்ளி மாணவ, மாணவிகள், 400 பேருக்கு, தலா 1,000 ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை, சத்திய சாய் அன்னபூர்ணா டிரஸ்ட் அகில இந்திய மேலாளர் சந்தோஷ் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், தருமபுரி மாவட்ட ஒருங்கினைப்பாளர் நாகராஜ் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினர். இதில் பள்ளி மாணவர்களின் பெற்றோர் திரலாக கலந்துக்கொண்டு கரோனா நல உதவிகளை பெற்றுச் சென்றனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!