தேன்கனிக்கோட்டை பேட்ராயசுவாமி கோயிலில் தேர்திருவிழா முன்னிட்டு 13.04.2022-ம் அன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு உள்ளூர் விடுமுறை
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் பேட்ராயசுவாமி கோயிலில் தேர்திருவிழா நாளான 13.04.2022-ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. 30.04.2022
இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.