முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட்-7ல் அமைதிப் பேரணி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆகஸ்டு-7 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் ஓசூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை அண்ணா சிலை எதிரில் இருந்து புறப்பட்டு ராம்நகர் அண்ணா சிலை வரை அமைதிப் பேரணியாக சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பகுதி செயலாளர், கிளை செயலாளர்கள், கழகத் தோழர்கள், மற்றும் பொதுமக்கள் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ-வுமான ஒய்.பிரகாஷ்வேண்டுகோள் விடுத்துள்ளார்