Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க இணையதள வாயிலாக 30-09-2022 க்குள் விண்ணப்பிக்கவும் – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க இணையதள வாயிலாக 30-09-2022 க்குள் விண்ணப்பிக்கவும் – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் விதியினை முறையாக கடைபிடித்து இணையதளத்தின் வாயிலாக இ-சேவை/மக்கள் கணினி மையம் மூலம் 30.09.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கிருஷ்ணனாகிரி மாவட்டத்தில் வருகின்ற 2022 அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ல் விதி 84-னை முறையாக கடைபிடித்து இணையதளத்தின் வாயிலாக இ-சேவை/மக்கள் கணினி மையம் மூலம் கீழ்கண்ட ஆவணங்களுடன் 30.09.2022-க்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1) சம்மந்தப்பட்ட ஊராட்சி வரி இரசீது.

2) உரிமம் கோரும் இடத்தின் வரைபடம் (6 நகல்கள்)

3) நடப்பு நிதி ஆண்டின் கட்டிட வரி ரசீது.

4) வாடகை கட்டிடமாக இருப்பிள் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பத்துடன் கூடிய ஓராண்டிற்கு குறையாத காலத்திற்கு செய்துகொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் (அசல் மற்றும் 5 நகல்கள்)

5) உரிமக் கட்டணம் ரூ.500/- கீழ்காணும் தலைப்பில் IFHRMS செலுத்தி

அதற்கான அசல் சவான் இணைக்கப்பட வேண்டும்.

Department Code

: 02301

District

: Krishnagiri

: 30010074

DDO Code Account Code

: 007060109AA-22738

6) இரண்டு Stamp size புகைப்படம்,

7) ஆதார் அடையாள அட்டை.

மேலும் தற்காலிக பட்டாசு கடைக்கு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோர் கீழ்க்கண்ட

(1) பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களினால் கட்டப்பட்டதாக இருக்கக் கூடாது.

(2) தற்காலிக உரிமம் கோரும் ஒவ்வொரு கடைகளுக்கு இடையே 3 மீட்டர் இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும். மேலும் அருகில் குடியிருப்புகள் இருத்தல் கூடாது.

(3) எதிர் எதிரே பட்டாசு கடைகள் இருப்பின் உரிமம் வழங்கப்பட மாட்டாது. (4) எண்ணெயில் எரியும் விளக்கு, எரிவாயு விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் இதர மின்சாரம் இல்லாத விளக்குகள் கடையில் பயன்படுத்தக் கூடாது. மின்சார விளக்குகள் பயன்படுத்தும் போது மின்சார ஒயர்கள், சுவிட்ச் பெட்டிகள் சுவற்றில் பாதுகாப்புடன் எவ்வித மின்கசிவும் இல்லாமல் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
(5) உரிமம் பெற்றவர்கள் உரிமத்தின் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்துக்கொள்ளக்கூடாது.

(6) அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரிமதாரரும் அவரது பணியாளர்களும் தெரிந்திருக்க வேண்டும்.

(7) தணிக்கை அலுவலர் கடையினை தணிக்கை செய்து விதிமுறைகளின்படி தெரிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிமம் கோருபவர் மேற்கொள்ள வேண்டும். விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம், வட்டாட்சியர், தீயணைப்பு அலுவலர் மற்றும் உரிமம் வழங்கிய அலுவலருக்கும் தெரிவிக்க வேண்டும்.

(8) அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே பட்டாசு இனங்கள் வாங்கி விற்பனை செய்தல் வேண்டும்.

(9)உரிமம் பெற்ற இடத்தில் 2 தீயணைப்புக் கருவிகள், 2 தண்ணீர் வாளிகள், 2 மணல் நிரப்பப்பட்ட வாளிகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அல்லது தேவைக்கு ஏற்ப கூடுதலாகவும் முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

(10) பட்டாசுகளை ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களே கையாள வேண்டும்.

(11) பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அருகில் வாகனங்களை நிறுத்துவதோ அல்லது சுற்றுப்புறத்தின் சூழலை கெடுக்கும் வகையிலோ வியாபாரம் செய்யக்கூடாது.

(12) உரிமத்தை, தணிக்கை அலுவலர்களின் தணிக்கையின் போது பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

(13) இருப்பு பதிவேடு மற்றும் தணிக்கை பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும், தவறும் உரிமைதாரரின் உரிமத்தை ரத்து செய்வதுடன், அவரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!