இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ நேரில் சென்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
சென்னையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக பர்கூர் துணை மின் நிலையத்தில் 110 /11 கி. வோ ஆற்றல் மின் மாற்றி திறன் 10MVA வில் இருந்து 16MVA ஆக தரம் உயர்த்தி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் திரு.D.மதியழகன்.MLA அவர்கள் நேரில் சென்று திறந்து வைத்தார். உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட அவை தலைவர் அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் அவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர் அவர்கள் , தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், பர்கூர் நகர செயலாளர் அவர்கள், பேரூராட்சி தலைவர் அவர்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.