திண்டுக்கல் பாரத மாதா பவுண்டேஷன் சார்பாக திண்டுக்கல் பார்வதி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான குடும்ப விழாவில் மை தருமபுரி அமைப்பின் இரத்ததான சேவை விழிப்புணர்வை பாராட்டி உயிர் காக்கும் உன்னதமான சேவைக்கான தங்க விருது வழங்கப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் மூலம் தலசீமியா குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்வோருக்கு தேவையான இரத்தத்தை முகாம் மற்றும் அவசர ரத்ததான தேவையை ஆண் கொடையாளர்கள், பெண் கொடையாளர்கள் உட்பட அனைவரையும் சேர்த்து இதுவரை 7000 யூனிட் இரத்தம் கொடை வழங்கியதை பாராட்டி விருது வழங்கினர். இந்த விருதினை மை தருமபுரி அமைப்பின் குருதி கொடையாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்து கொள்கிறோம். விருது வழங்கி பாராட்டிய பாரத மாதா பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்த் குமார் அவர்களிடம் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், விஜயகாந்த், அருள்மணி ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர். இரத்ததானம் அளிப்போம் பிறர் உயிரைக் காப்போம்.
கிருஷ்ணகிரி
ரூ.10.5 இலட்ச மதிப்பீட்டில் பர்கூர் தொகுதி செல்லம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்க தே.மதியழகன் எம்எல்ஏ பூமி பூஜை!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள விளங்காமுடி ஊராட்சியில் செல்லம்பட்டியில் மாவட்ட ஊராட்சி நிதிக்குழுவிலிருந்து ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் செல்லம்பட்டி சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட அமைத்தலைவர் நாகராஜ், தொழஅன்பரசன், ஒன்றிய கழக செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வித்தியாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சக்தி ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன்,மூத்த முன்னோடி பரமாத்மா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுகுணா அம்மன் ராஜா, கிளை கழக செயலாளர் செந்தில்குமார் மற்றும் திப்பன், ஆர்.கார்த்திக், சங்கர், எஸ்.சிவன், கார்த்திக் உள்பட ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாரூரில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் 52 ஆவது புனித உடல் நல்லடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலுபள்ளி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலை விபத்தில் அடி பட்டுள்ளார். சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை பற்றி விசாரித்ததில் இவர் ஆதரவற்ற முதியவர் என தகவல் கிடைத்தது இவரை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை. இன்று குருபரபள்ளி காவல் நிலைய காவலர் அன்பு, மை தருமபுரி அலெக்சாண்டர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். முதியவரை நல்லடக்கம் செய்ய உறுதுணையாக இருந்த கிருஷ்ணகிரி அறம் சிகரம் கோபிநாத் அவர்களுக்கு நன்றிகள். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை ஆதரவற்று இறந்த 52 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.பாபு, துணை காவல் கண்காணிப்பாளர் (கிருஷ்ணகிரி) திருமதி.நா.தமிழரசி, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.எம்.பி.காளியப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்திய “கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம்” சிறப்பு முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர்கே.எம்.சரயு அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. நீர்வளத்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்திய “கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம்” சிறப்பு முகாம் நிறைவு விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் (26.05.2023) அன்று துவக்கி வைத்து மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். உடன் ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.தி.சினேகா இ.ஆ.ப., ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரண்யா இ.ஆ.ப, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மணிமேகலை, மாவட்ட அருங்காட்சியக காப்பாச்சியர் திரு.கோவிந்தராஜ், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் திருமுறை பிரச்சாரம் செய்தனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்றவர்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி,சிறப்புரையாற்றினார்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை தலைவர் சபியுல்லா கண்டன கோஷங்களை எழுப்பினர், உடனிஇருந்தவர்கள்கெலமங்கலம் நகரத் தலைவர் சபீர், துணை தலைவர் மௌலா, மற்றும் செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர் இம்ரான், ஹமித், மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA அறிவிப்பு!
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA அறிவிப்பு!கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் தலைமையில் இன்று 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஒசூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பொருள்: 1. முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா குறித்து,2. கழக உறுப்பினர் சேர்க்கை3.கழக ஆக்கப்பணிகள்என்று மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ்MLAதனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அறிக்கை.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினருக்குஒரு முக்கிய அறிவிப்பு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ அறிக்கை.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 திங்கள்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்துகேட்டா கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரில் விஷக் கழிவுகள் கலந்து நுரையோடு வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள். மழைக்காலங்களில் இது போன்ற நிலைகள் அடிக்கடி ஏற்படுவதால் மாடு வளர்ப்பு மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர் இந்த கழிவுகள் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக்காக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.ஆகையால் தளபதி அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) இன்று பகல் 11 மணியளவில் நடைப்பெறும்.அதே சமயம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகரம், நகரம், ஒன்றியம், சார்பு அணி மற்றும் பகுதிகளில் சார்பில் தாங்கள் உள்ள இடங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதியம் உணவு வழங்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவேளை (மதியம்) உணவு வழங்கும் இடங்கள்:-1). ஓசூர்.2). கிருஷ்ணகிரி3). காவேரிப்பட்டணம்4). பர்கூர்5). ஊத்தங்கரை6). தளி7).தேன்கனிக்கோட்டை8). கெலமங்கலம்9).வேப்பனஹள்ளி10). சூளகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்