தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மாவட்ட தொழில் மையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நிழற்கூடம் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒ.கே. சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர்கள் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, பெ.சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்திவெங்கடேசன், பசுமை தாயக பொறுப்பாளர் சரவணன், முனுசாமி, துரை, கண்ணதாசன், சிவக்குமார், சிவச்சந்திரன், செல்வம், பெரியசாமி, சரவணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளியில் பயணியர் நிழற்கூடம் அமைக்க பணிக்கு தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை
Add Comment