Home » மை தருமபுரி அமரர் சேவை மூலம் 52 ஆவது புனித உடல் நல்லடக்கம்

மை தருமபுரி அமரர் சேவை மூலம் 52 ஆவது புனித உடல் நல்லடக்கம்

by Babukanth V
0 comment

மை தருமபுரி அமரர் சேவை மூலம் 52 ஆவது புனித உடல் நல்லடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலுபள்ளி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலை விபத்தில் அடி பட்டுள்ளார். சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை பற்றி விசாரித்ததில் இவர்‌ ஆதரவற்ற முதியவர் என தகவல் கிடைத்தது இவரை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை. இன்று குருபரபள்ளி காவல் நிலைய காவலர்‌ அன்பு, மை தருமபுரி அலெக்சாண்டர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். முதியவரை நல்லடக்கம் செய்ய உறுதுணையாக இருந்த கிருஷ்ணகிரி அறம் சிகரம் கோபிநாத் அவர்களுக்கு நன்றிகள். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை ஆதரவற்று இறந்த 52 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

You may also like

Add Comment
error: Content is protected !!