காவேரிப்பட்டணத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் உணவு வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பெய்த கனமழையின் போது ஜோதி நகர், சுண்ணாம்புக்கல், சந்தை பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கப்பட்டு, காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு மையத்தில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மீட்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் பொதுமக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களும், உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ டி.செங்குட்டுவன்
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளர் தேங்காய்சுப்ரமணி ,பேரூர் கழக செயலாளர் ஜேகேஎஸ்.பாபு முன்னாள் பேரூர் கழக செயலாளர்
த.விவேகானந்தன் , கேவிஎஸ்.சீனிவாசன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் கே.எஸ்.செந்தில்குமார்,
ஜேகே எஸ்.சாஜித், விஜய்ஆனந்த், மற்றும் அமுதாபழனி , சின்ராஜ், பசுபதி. முத்து. சங்கர், ஸ்ரீதர், பாபாமாதையன் கருணாநிதி, உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.