போச்சம்பள்ளி அருகில் தொடர் மழை காரணமாக தோட்டத்தில் அழுகும் பப்பாளி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர் எதிரொலியால், விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து நெல், வாழை, தென்னை போன்றவைகளால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், போச்சம்பள்ளி அடுத்த, திருவயலூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் என்பவர் 2 ஏக்கர் அளவில் ரெட்லேடி என்ற பப்பாளி பயிரிட்டுள்ளார். தற்போது இருபது நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருவதால், தோட்டத்தில் பப்பாளி அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. பப்பாளி கிலோ 10 ரூபாய் முதல் 15 வரை மொத்த விற்பனையாகும் நிலையில், அறுவடை செய்யாமல் விட்டதால், சுமார் 2 ஏக்கர் அளவில் உள்ள பப்பாளி பழுத்து கீழே விழுந்து வருகிறது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென ஸ்ரீராமன் கோரிக்கை வைக்கிறார்.