கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்க பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்க பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான பணிகளை அரசு தொடங்கியது. விமான நிலையம் அமைக்க அனைத்து வசதிகளும் கொண்ட இடங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்கலாம் என TIDCO அறிவித்துள்ளது.