Home » காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கான கோவிட் – 19 தடுப்பூசி முகாம் PTA தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கான கோவிட் – 19 தடுப்பூசி முகாம் PTA தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

by Babukanth V
0 comment

காவேரிப்பட்டணத்தில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம்…காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கான கோவிட் – 19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தாமரைசெல்வி, உதவி தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, இளங்கோ, துரைராஜ், அமுதா ஆகியோரும் பாரத சாரணர் சங்க மாவட்ட துணை செயலர் பவுன்ராஜ், ஆசிரியர்கள் கோபு, சரவணன், செந்தில்., சுரேஷ்பாபு ஆகியோரும் மருத்துவர்கள் சண்முகம், சிபிராஜ், சோமசுந்தரம், செவிலியர் சிவரஞ்சனி, கிராம சுகாதார செவிலியர்கள் தமிழ்செல்வி, சைலஜா, தேவி லட்சுமி, பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். இம்முகாமில் சுமார் 600 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

You may also like

Add Comment
error: Content is protected !!