Home » கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழஞ்சலி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழஞ்சலி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழஞ்சலி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த தமிழக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நாள் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் 300 மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு மொழிப்போர் தியாகிகள் உருவப்படம் அடங்கிய பேனருக்கு மாலை அணிவித்து மலர்களை தூவி புகழஞ்சலி, மற்றும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன் மாவட்டம் அவைத்தலைவர் காத்தவராயன் கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ், ஒன்றியக் குழுத் தலைவர் பையூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கேசவன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கன்னியப்பன்,கூட்டுறவு பால் ஒன்றிய குழு தலைவர் குப்புசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சமரசம், முனி வெங்கடப்பன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், காவேரிப்பட்டினம் நகர செயலாளர் வாசுதேவன், தாபா வெங்கட்ராமன், ஐடி விங் பொறுப்பாளர்கள் வேலன், சந்துரு, விக்கி, கார்த்திக் பால்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!