தருமபுரி மாவட்ட அஇஅதிமுக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு முன்னாள் அமைச்சர்- மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் மாபெரும் போராட்டம் ஆகும். அந்தப் போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு தருமபுரி மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் நடைபெறும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உயர்க்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான திருமிகு.கே.பி. அன்பழகன் MLA அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.