ஒகேனக்கல்லுக்கு 5,000 கனஅடி நீர்வரத்து.
ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில மாதங்க ளாக நீர்வரத்து குறைந்ததால் அருவிகளிலும் நீர்வரத்து குறைந் தது. தற்போது கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி நீர் புதன்கிழமை ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 900 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி புதன் கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 2,000 கன அடியாகவும், பிற்பிகலில் நொடிக்கு 5,000 கனஅடியாகவும் வந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து குறைந்து ஆற்றில் பாறைத் திட்டுகள் தெரிந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.