பாலக்கோடு, ஏப்.21-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் இயங்கி வரும் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா நடைப்பெற்று வருகிறது. முதல் நாள் விளையாட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்பாபு அவர்கள் வரவேற்புரை (ம) ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் கல்லூரி முதல்வர் செண்பகலெட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பாலக்கோடு டிஎஸ்பி தினகரன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறை சார்பில் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது..
பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா
Add Comment