கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 99 -வது பிறந்த நாள் விழா வெகு விமர்ச்சியாக கொண் டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்செந்தில்குமார்
தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர்
அம்சவேணி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டி. செங்குட்டுவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுகவனம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, பொது குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜன்,
நகர செயலாளர் ஜே.கே.எஸ். பாபு, திமுக கழக பொருப்பாளர் கே.வி.எஸ் சீனிவாசன்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினி, நகர் மன்ற துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 2000 பெண்களுக்கு புடவை,
1000 ஆண்களுக்கு வேட்டி,
3000 பொதுமக்களுக்கு பிரியாணி, 3000 லட்டு,
99 கிலோ கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
காவேரிப்பட்டணத்தில் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் பங்கேற்று நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
Add Comment