முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஐயா முரசொலி மாறன் அவர்களின் 19 -ம் ஆண்டு நினைவு தினம் மாவட்டம் முழுவதும் அவருடைய திருவுருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தவும்.
மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ அறிக்கை
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவரும், முன்னாள் மத்திய அமைச்சர்மான மாண்புமிகு ஐயா முரசொலி மாறன் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு தினத்தைையாட்டி இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழகங்களிலும் ஐயா அவர்களது திருவுருவப்படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று காலை 09-30 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக சார்பாக ஐயா முரசொலி மாறன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்