Home » கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தருமபுரி நீச்சல் குளத்தில் தஞ்சமடைந்த குழந்தைகள்.

கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தருமபுரி நீச்சல் குளத்தில் தஞ்சமடைந்த குழந்தைகள்.

by Poovizhi R
0 comment

தருமபுரி, தருமபுரி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் தருமபுரி, நல்லம்பள்ளியில் சாரல் மழை பெய்த போதும், நேற்று இப்பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இதையடுத்து பெற் றோர்கள் தங்களது குழந்தைகள் கோடை வெயிலை சமாளிக்க விடுமுறை தினமான நேற்று தருமபுரி நீச்சல் குளத்துக்கு அழைத்து வந்து குளிக்க விட்டனர். மேலும், சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தனர். இதையடுத்து, சிறுவர்கள் ஆனந்தமாக நீச்சல் குளத்தில் குதித்தும், நீந்தியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!