Home » பாலக்கோடு பேரூர் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பங்கேற்றார்

பாலக்கோடு பேரூர் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பங்கேற்றார்

by Poovizhi R
0 comment

பாலக்கோடு திமுக பேரூர் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பங்கேற்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூர் கழக திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பிகே முரளி தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார் மேலும் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார் .அப்பொழது பாலக்கோட்டில் உள்ள 16 வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் தங்கள் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும் தலைமை கழகம் அறிவித்துள்ள ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து 18 வார்டு கிளைச் செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் பாபு என்கின்ற முர்த்துஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மூத்த வழக்கறிஞர் மாவட்ட விவசாய அணி ரவி,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், துணை அமைப்பாளர் பாம்பே சக்தி, பட்டு அஜி சுல்லா, பாலக்கோடு பேரூராட்சி துணைத்தலைவர் இதாயத்துல்லா,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!