கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 40 வது வார்டு பெரியார் நகரில் கடந்த 20 நாட்களாக குடி தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதால் இந்த பகுதியில் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால் இந்த பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் அவர்களிடம் சென்று பல தடவை அரசு அதிகாரிகளுக்கு குடி தண்ணீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் ஒரு பலனும் இல்லை என்று பாஜக மாவட்ட தலைவர் எம்.நாகராஜிடம் முறையிட்டனர். நாகராஜ் அவர்கள் உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுதுஅரசு அதிகாரிகள் உடனடியாக 40வது வார்டு பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் நேரில் வந்து சுத்தமான குடிநீர் தங்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அந்தப் பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் எம். நாகராஜ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். போராட்டம் கைவிடப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 40 வது வார்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Add Comment