கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் (PowerPoint presentation ) கணினி நிகழ்த்துகை போட்டி தொடக்க விழா புதன்கிழமை (19.0 4 .2023 ) அன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவியர்கள் கணினி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும். புதிய மென்பொருள்களை கண்டறிதல் வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு பயன்படும் வகையில் காலத்திற்கு ஏற்ற முறையில் புதிய புதிய கணினியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக சி பி சி ஐ டி காவல்துறை உதவி ஆய்வாளருமான திரு சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். தன்னுடைய சிறப்பு உரையில், கணினி சார்ந்த மென்பொருள் களை நல்ல செயல்களுக்கு பயன்படுத்துதல் வேண்டும் என்று பேசினார். கல்லூரியின் மாணவ மாணவியர்களின் தனித் திறன்களை கண்டறியும் பொருட்டு அனைத்து போட்டிகளுக்கும் முனைவர் மா. ஜெகன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார் . கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் திரு முருகதாஸ் அவர்கள் கணினி நிகழ்த்துகை போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் சு.தனபால் அவர்கள் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் கணினி (PowerPoint presentation ) நிகழ்த்துகைப் போட்டித் தொடக்க விழா
Add Comment