Home » சிம்பல் திராடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசிகரலப்பள்ளி கிராமத்தில் தார் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை.

சிம்பல் திராடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசிகரலப்பள்ளி கிராமத்தில் தார் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட சிம்பல் திராடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசிகரலப்பள்ளி கிராமத்தில் தார் சாலையை விரிவுபடுத்த சிம்பல் திராடி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிதேவி வெங்கடேஷ்ராஜ் துணைத் தலைவர் SV.சீனிவாசன்,சூளகிரி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் DP.முனிசந்திரன் அவர்கள் தலைமையில் மரியாதைக்குரிய வட்டாட்சியர் அவர்களிடம் மனுவை வழங்கினர்.அந்த மனுவை ஏற்று இன்று தார் சாலை விரிவுபடுத்த பணிகள் மேற்பார்வை செய்தனர்.கிராம நிர்வாக அலுவலர்,ஊராட்சி செயலாளர் சுந்தர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் அதிமுக அரசு செய்யாத பணியை இன்று விடிய அரசு செய்து காட்டியுள்ளது. ஊர் பொதுமக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!