ஜெக்கேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் ஜெக்கேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த பாரதி ஆசிரியர் இன்று ஓய்வு பெற்றதை முன்னிட்டு,ஜெக்கேரி ஊராட்சித் தலைவர் ராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாரதி அவர்களுக்கு ஊராட்சி சார்பில் பொன்னாடை போர்த்தி பூ மாலை அணிவித்து நினைவுபரசு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்,ஜெக்கேரி ஊராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் வீரம்மா, ஆசிரியர்கள் ஏமா, கௌரம்மா, லாவண்யா, துளசிராமன்,ஜெயக்குமார், லோகேஷ், மற்றும் ஜெக்கேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேன்கனிகோட்டை வட்டம் ஜெக்கேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு.
Add Comment