*ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து*ஒசூர்: சேலத்தில் இருந்து ஒசூர் வழியாக பெங்களூருக்கு உரங்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்று ஏப்ரல் 21 அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டது ரயில் என்ஜினிலிருந்து 3 முதல் 8வது பெட்டி வரை, தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால், சேலம், தர்மபுரி, ஒசூர் வழியாக பெங்களூருக்கு செல்லும் ரயில்களும், பெங்களூருவில் இருந்து சேலம், தர்மபுரி, ஒசூர் வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களும், மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இன்று அதிகாலையில் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
Add Comment