Home » தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணை.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணை.

by Poovizhi R
0 comment

வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணைதருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிக்கொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி காளியப்பன்(71) இவர் இன்று காலை கூலி வேலைக்கு செல்வதற்காக வட்டகானம்பட்டி காப்புகாடு வழியில் சென்று கொண்டிருந்தார், அப்போது காப்புக் காட்டிலிருந்து வெளியே வந்த இரண்டு காட்டு யானைகளை காளியப்பன் எதிரில் வந்தன.இதை சற்றும் எதிர்பாராத காளியப்பினை யானையிடமிருந்து தப்பிக்க யானையை கைகளால் துரத்தி உள்ளார், ஆனால் காட்டு யானை இவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றன,இதனால் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் மாரண்டஅள்ளி காவல்துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.யானை தாக்கி முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Add Comment
error: Content is protected !!