மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூன்றாம் ஆண்டு சேவையில் சிறப்பு விருந்தினர்கள் அழைப்புமை தருமபுரி அமைப்பின் மூலம் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டம் ஏப்ரல் 14,2021 தமிழ் புத்தாண்டு முதல் தினந்தோறும் உணவு வழங்கி வருகிறோம். இரண்டு ஆண்டுகள் மக்கள் ஆதரவில் இடைவிடாமல் தினந்தோறும் மக்களுக்கு உணவு வழங்கும் சேவை தொடர்கிறது. மூன்றாம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருகிறோம். இன்று சிறப்பு விருந்தினராக இலக்கியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சுதா ரமேஷ், இந்தியன் பில்லர்ஸ் வினோத் நரசிம்மன், சோழ பாண்டியன், சீனிவாசன் எல்ஐசி அலுவலர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு உணவு வழங்கினர். மனித நேயம் காப்போம் மனித நேயம் போற்றுவோம்.
மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூன்றாம் ஆண்டு சேவையில் சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு
Add Comment