Home » தேன்கனிக்கோட்டை சந்தனப் பள்ளியில் ரூ.14.74.கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமான பணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

தேன்கனிக்கோட்டை சந்தனப் பள்ளியில் ரூ.14.74.கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமான பணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் சந்தனப் பள்ளியில் ரூ.14 கோடியே 74 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமான பணிக்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் பணியினை துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தீபக் ஜேக்கப், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், தளி சட்டமன்ற உறுப்பினர் T.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், தளி யூனியன் சேர்மென் ஸ்ரீனிவாசன், தேன்கனிக்கோட்டை சேர்மென் டி.ஆர்.சீனிவாசன், இராணிப்பேட்டை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!