Home » ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் சார்பாக கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் சார்பாக கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தின் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியையும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் கொடியையும் கையில் ஏந்திய படி ஊர்வலமாக வந்து கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஏ .செல்லகுமார் அலுவலகத்தை வந்தடைந்து அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது கர்நாடகா தேர்தல் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஏ. செல்லக்குமார் கர்நாடகாவில் உள்ளதால் அங்கு வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நகர தலைவர் ஏ..லலித் ஆண்டனி வரவேற்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை வரவேற்று அவர்களிடம் இருந்த கோரிக்கை மனுவினை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் அலுவலரிடம் மனுவை ஒப்படைத்தார். அதில் உள்ள கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஓய்வு பெற்ற ராணுவத்தினர் முன்வைத்தனர் அதில் ஒரே பதவி, ஒரே உதியம் , என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்ற வேண்டும்.ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு உண்டான நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் இதனை நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வானது இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலர்களில் இன்று அந்தந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!