தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி முனியப்பன் கோவில் அருகில் சனத்குமார் நதி ஓரத்தில் தடுப்பு சுவர் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூகை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. இலக்கியம்பட்டி பஞ்சாயத் தலைவர் சுதா ரமேஷ் , 12 வது வார்டு உறுப்பினர் இளங்கோ நம்பர் மணி ரவிக்குமார்,இவ்விழாவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் திரு. எஸ்.பாபு உதவி செயற்பொறியாளர்திரு.கே.சந்தோஷ்குமார் உதவி பொறியாளர் மற்றும் பாமக நிர்வாகிகள் இலக்கியம்பட்டி ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இலக்கியம்பட்டி ஊராட்சி முனியப்பன் கோவில் அருகில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை! தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்
Add Comment