Home » போச்சம்பள்ளியில் 16.05.2023 செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு தகவல்

போச்சம்பள்ளியில் 16.05.2023 செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு தகவல்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், வட்டாட்சியர்அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணைகளின்படி, 16.05.2023 செவ்வாய் கிழமை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.சீ.பாபு அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாற்றுத்திறனாளி நல அலுவலர், போச்சம்பள்ளி வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் (ச.பா.தி), போச்சம்பள்ளி, மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள்.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் unique ID பதிவு செய்தல், இலவச மருத்துவ பரிசோதனைகள், புதிய ஆதார் அட்டை பதிவு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.எனவே, மேற்கண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டத்தில் போச்சம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது குறை நிவர்த்திகள் தொடர்பாக விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.சீ.பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!