Home » அத்திமுட்லு கிராமத்தில் சுமார் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை

அத்திமுட்லு கிராமத்தில் சுமார் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை

by Poovizhi R
0 comment

அத்திமுட்லு கிராமத்தில் 19இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அத்திமுட்லு காலணியில் 19 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று காலை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில்செந்தில், கோபால், மாவட்டஅறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வாசு, மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!