Home » போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்த்தால் விளை நிலங்களில் பறிக்காமல் விட்ட விவசாயிகள்

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்த்தால் விளை நிலங்களில் பறிக்காமல் விட்ட விவசாயிகள்

by Poovizhi R
0 comment

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்த்தால் விளை நிலங்களில் பறிக்காமல் விட்ட விவசாயிகள்கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான புலியூர், அரசம்பட்டி, அகரம், செல்லம்பட்டி, நாகரசம்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது காய்த்து குலுங்குகின்றன. இதனால் புலியூர் தக்காளி மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.15க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது தினமும் வரத்து அதிகரிப்பால் விலை படிப்படியாக குறைந்து இன்று ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனையாகிறது. விலை சரிவால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உள்ள தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதுகுறித்து வண்டிகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், “வரத்து அதிகரிப்பால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காலி ரூ.5-க்கு வாங்கி, வியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கின்றனர். பறிக்கும் கூலிக்கு கூட பணம் கிடைக்காத காரணத்தால் நிலங்களிலேயே பறிக்காமல் விட்டுள்ளோம் என தெரிவித்தார்.

You may also like

Add Comment
error: Content is protected !!