Home » கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கு சார்ந்தோர் சான்று

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கு சார்ந்தோர் சான்று

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கு சார்ந்தோர் சான்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கு 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான சார்ந்தோர் சான்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.சார்ந்தோர் சான்று பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் தனது சிறாரின் +2 மதிப்பெண் சான்று, கல்லூரியில் சேர விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், சாதிச்சான்று, படைப்பணிச்சான்று, அடையாள அட்டை மற்றும் ஓய்வூதிய (PPO) நகல் ஆகிய ஆவணங்களுடன் தன்னுடைய மகன் / மகள் அவர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி சார்ந்தோர் சான்று பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!