Home » காரிமங்கலம் அருகே வீட்டிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் எரிந்து நாசம்!

காரிமங்கலம் அருகே வீட்டிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் எரிந்து நாசம்!

by Poovizhi R
0 comment

காரிமங்கலம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் சப்பாணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலி தொழிலாளி. இவரது மனைவி லலிதா. நேற்று காலை ராமன் வேலைக்கு சென்று இருந்த நிலையில் லலிதா மாடுகளை அருகில் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்காகஅழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து புகை வரவே அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து ராமனுக்கு தகவல் தெரிவித்தன.ர் ராமன் மற்றும் அவரது மனைவி வந்து பார்த்தபோது வீட்டில் தீ பரவி அறைக்குள் இருந்த பீரோ கட்டில் உட்பட பல்வேறு பொருட்கள் தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்ட நிலையில் தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் தீயில் கருகியது தெரியவந்தது. மேலும் டூவீலர் ஆர்சி புத்தகங்கள் நில பத்திரம் ஆகியவையும் தீயில் எரிந்தது. தகவல் அறிந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பகுதிக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். மேலும் அரசு தரப்பில் செய்ய வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்வதாக உறுதி அளித்தார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன் உட்பட பலர் உடன் இருந்தனர். தீ விபத்து சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!