Home » பாசன நீர் பற்றாக்குறையா? – 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் பயன்பெற விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் அழைப்பு

பாசன நீர் பற்றாக்குறையா? – 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் பயன்பெற விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் அழைப்பு

by Babukanth V
0 comment

பாசன நீர் பற்றாக்குறையா? – 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் பயன்பெற விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் அழைப்பு

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 50 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு. சுரேஷ்குமார் கூறியதாவது, நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் வேளாண்மைத்துறையில் துவரை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும், இராகி, நிலக்கடலை, உளுந்து, பச்சைபயறு, கொள்ளு, எள்ளு, போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம், மழைத் தூவுவான் ஆகிய நுண்ணீர் பாசன கருவிகளும் சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.

பாசன நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்திடவும், குறைந்த நீரில் அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திடவும் ஏதுவாக நுண்ணீர் பாசன முறையை புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் வழங்கும் ஆதார வசதியை ஏற்படுத்துவதற்காக, டீசல்மோட்டார்/ மின் மோட்டார் பம்பு செட் புதிதாக அமைத்திட விவசாயி செலவளிக்கும் தொகையில் 50% (GST நீங்கலாக) அதிக பட்சம்

ரூ.15,000/- மானியம் வழங்கப்படும். தங்கள் நிலத்தில் புதிதாக நீர் தேக்கத் தொட்டி அமைத்திட 50% மானியம் என்ற வகையில் ஒரு கன மீட்டருக்கு ரூ.350/- என்ற அளவில் ஒரு பயனாளிக்கு ரூ.40,000/- வரையிலும் (120 கன மீட்டருக்கு) மானியம் வழங்கப்படும்.

மேலும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நீர் கடத்தும் குழாய்கள் அமைத்தல் பணிக்காக இத்திட்டத்தில் விவசாயி செலவிடும் தொகையில் 50% என்ற வீதத்தில் அதிக பட்சம் ரூ.10,000/- வரையிலும் மானியம் வழங்கப்படும் என்றார்.

யார் பயன் பெறலாம்?

இந்த துணை நீர் மேலாண்மை திட்டத்தில் பயனாளியாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் புதிதாக சொட்டு நீர் / தெளிப்பு நீர் / மழை தூவுவான் அமைத்திட விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. எனவே, இது வரை நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் பயன் பெறாத இத்திட்டத்தின் மூலம் கூடுதல் பயன் பெறலாம். விவசாயிகள்

தேவையான ஆவணங்கள் என்ன?

சிறு/குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைபடம்(FMB) சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உடன் தங்கள் பகுதிக்கு உரிய வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உடனே பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார். குறைந்து வரும் நீர் ஆதார நிலையில் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த, “குறைந்த நீரில் அதிக மகசூல் ” பெற்றிட அனைவரும் நுண்ணீர் பாசனத் திட்டத்தினையும், ” துணை நீர் மேலாண்மை” திட்டத்தின் மானியத்தினையும் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கூறினார்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

தலைமையிடம் வாரியாக உதவி வேளாண்மை அலுவலர்கள் கிருஷ்ணகிரி திரு.மாதையன் – 9488753781, ஆலப்பட்டி-முத்துசாமி-9443363925, மாதேப்பட்டி-முனிராஜி-8344371443, மோரமடுகு- சிவராசு-8248888751, மகாராஜகடை-விஜயன் 8838343514 மற்றும் கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா-9442559842 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தவறாமல் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றது.

You may also like

Add Comment
error: Content is protected !!