Home » கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவுநாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவுநாள் அனுசரிப்பு

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரியில்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று உறுதிமொழி எடுத்தனர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி பெங்களூர் ரோடு புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ. லலித் ஆண்டனி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் இந்தியத் திருநாட்டில் வன்முறை வகுப்புவாதம் தீவிரவாதம் இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்றும் மறைந்த ராஜீவ் காந்தி மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏற்றனர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது என்று உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட துணைத் தலைவர் பி.சி.சேகர் . ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் , மாவட்ட பொதுச் செயலாளர் ஹரி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மைக்கேல், மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் . நகர துணை தலைவர் மரிய இருதயம் . குழந்தை இயேசு என்கின்ற குட்டி , முரளி ,ரிச்சர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!