Home » சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொது கூட்டம்.

சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொது கூட்டம்.

by Poovizhi R
0 comment

சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொது கூட்டம். ஊத்தங்கரை, மே. 21:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி புதூரில் புதிதாக அமைய உள்ள, சுங்கச்சாவடி அமைப்பதற்க்கு எதிரிப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது.சுங்கச்சாவடி அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது, கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு வழங்கும் தொகை குறைவாக உள்ளதாக, நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன பொதுக்கூட்டத்திற்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மு.நெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பவுண்ராஜ், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட தொழிற்சங்க சுரேஷ்குமார்,நித்தியகுமார், விமல்குமார்,ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்.21யுடிபி.1.2. ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன பொது கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள்.

You may also like

Add Comment
error: Content is protected !!