Home » கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் நெய், பால்கோவா, குல்பி, மைசூர்பா, அல்வா, பாதாம் பவுடர், வெண்ணை உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் நெய், பால்கோவா, குல்பி, மைசூர்பா, அல்வா, பாதாம் பவுடர், வெண்ணை உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் நெய், பால்கோவா, குல்பி, மைசூர்பா, அல்வா, பாதாம் பவுடர், வெண்ணை உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் இன்று (23.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பால் வரத்து, பால் பதப்படுத்தும் பணிகள், நெய், பால்கோவா, குல்பி, மைசூர்பா, அல்வா, பாதாம் பவுடர், வெண்ணை, மோர், தயிர் பால் பேக்கட் தயாரிக்கும் பணிகள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நாள்தோறும் 77 ஆயிரம் லிட்டர் பால் வரத்து உள்ள நிலையில் உள்ளுர் விற்பனையாக 28 ஆயிரம் லிட்டரும், சென்னைக்கு நாள்தோறும் 40 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் உபரி பாலில் நெய், குல்பி, வெண்ணை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. பால் பதப்படுத்தம் இடம், பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.தொடர்ந்து ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியவளாகத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக கழிவு நீர் கால்வாய் அமைத்து வெளியேற்றவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் ஆவின் வளாகத்திற்கு நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க கருத்துரு தயார் செய்ய ஆவின், நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டார்.இவ்வாய்வின் போது ஆவின் பொதுமேலாளர் மரு. சுந்தரவடிவேலன், துணை பொது மேலாளர் மரு. நாகராஜ், துணை பதிவாளர் (பால்வளம்) திரு.கோபி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் திருமதி.ஜோதி, பொறியாளர் திரு.கொங்கரசன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் திரு.கார்த்திக், வட்டாட்சியர் திரு.சம்பத் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!