கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு அளித்தனர்,கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள வார்டு எண்:01,02,05,06,07.14. மற்றும் சில வார்டுகளில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த நிலை கடந்த 25 வருடங்களாக உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் கால்வாய்கள் வழியாக வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.எனவே, மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக,மாவட்ட ஆட்சியர் இடத்தை பார்வை செய்து மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கி இந்த கழிவுநீர் கால்வாய்களை சீர் செய்து தருமாறு கெலமங்கலம் பேரூராட்சி பொதுமக்கள் சார்பாக தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் K.P.தேவராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் கே.பி.தேவராஜ் கோரிக்கை மனு அளித்தார்
Add Comment