Home » மகேந்திரமங்கலத்தில்யில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு.

மகேந்திரமங்கலத்தில்யில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு.

by Poovizhi R
0 comment

மகேந்திரமங்கலத்தில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு.பாலக்கோடு, மே.24-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குபேந்திரன் (வயது.37), இவரது மனைவி ரங்கநாயகி(வயது. 26)இவர்களுக்கு திருமணமாகி 7 வருடமாகிறது 4 வயதில் ஒரு மகன் . உள்ளார்.குபேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தவர் வீட்டிற்க்கு அருகே உள்ள சங்கு என்பவரின் 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றின் ஆழத்தில் இருந்து குபேந்திரனை சடலமாக மீட்டனர்.தகவலறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!