Home » IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை இல்லம் தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA.

IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை இல்லம் தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA.

by Poovizhi R
0 comment

IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை இல்லம் தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்த மாவட்டச் கழக செயலாளர் தே.மதியழகன் MLA IAS தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது இந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி – கோமதி தம்பதியினரின் மகள் கே.ஆர்.ஹரிணி இவர் IAS தேர்வில் அகில இந்திய அளவில் 289 ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார். IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற கே.ஆர். ஹரிணி அவர்களது இல்லத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் நேரில் சென்று IAS தேர்வில் வெற்றி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஹரிணி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஊக்கமும் ஆக்கம் அளித்த அவரது பெற்றோரை வெகுவாக பாராட்டி வாழ்து கூறினார்.

You may also like

Add Comment
error: Content is protected !!