உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் இன்று ஓசூர் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்புமா, கையெழுத்து இயக்கமும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காசநோய் உறுதிமொழி ஏற்றும், கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டும், காசநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் C.ஆனந்தையா மாமன்ற உறுப்பினர் ரவி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஓசூர் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Add Comment