மார்ச் 18-ஆம் தேதி துவங்கிய சட்டமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளான நேற்று (10/05/2022) கேள்வி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கூடுதல் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பது குறித்து சட்டப்பேரவையில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினரான ஒய்.பிரகாஷ் அவர்கள் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த சுகாதாரதுறை அமைச்சர் ம.சுப்புரமணி சட்டப்பேரவை முடிந்த பின்னர் தமிழ்நாட்டில் திறக்கப்பட தயாராக உள்ள 36 கட்டிடங்ளுடன் சேர்த்து கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி கூடுதல் கட்டிடத்தினையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
சட்ட பேரவையில் ஓசூர் எம்.எல்.ஏ கேள்வி !
Add Comment