இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கு ரூ. 98.80 இலட்சம் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளையும் காது, மூக்கு, தொண்டை துறை தலைவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.98.80 இலட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கிருஷ்ணகிரி உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் வழங்கினார்
Add Comment