கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு அந்த மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.இந்த குறைதீர்ப்பு முகாமில் மகப்பேறு நிதியுதவி, மகளிர் சங்கங்களுக்கு நிதியுதவி, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, திருமண உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் ஓசூர் சட்ட மன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி. ஜெயசந்திர பானுரெட்டி இஆப, தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்ஏ.சத்யா, பி.முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்ர் ஆர்.காந்தி முன்னிலையில் தேன்கனிக்கோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது
previous post
23-12-2021 இன்றைய கிருஷ்ணகிரி டுடே டிஜிட்டல் நாளிதழ்
Add Comment