ஸ்தூபி மைதானத்தில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயின் கால் முறிவு.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பட்றஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாது (வயது.40) இவர் நேற்று காலை வீட்டிலிருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார், பாலக்கோடு ஸ்தூபிமைதானம் ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மாதுவிற்க்கு பலத்த காயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிந்தது,உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்த பாலகோடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாலக்கோடு ஸ்தூபி மைதானத்தில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயின் கால் முறிவு.
Add Comment